எழுத்து பிழை என்ன செய்யும்
(சிறுகதை)
மாஞ்சோலை என்ற கிராமத்தில்
மாடசாமி என்ற விவசாயி
வாழ்ந்து வந்தார்,
அவரிடம் 2 மாடுகள் இருந்தன. பூஞ்சோலை என்ற
கிராமத்தில் வசிக்கும் பொன்னையா என்கிற மாட்டு
வியாபாரி, மாடசாமி- யிடம், மாடுகளை விலைக்கு கேட்க சென்றார்.
அக்காலத்தில் இருந்த முறையான இருவர் கை மீதும், துண்டை
போட்டு விரல்களை பிடித்து அழுத்தி மற்றவர்கள்
அறியாவண்ணம் விலையை பேசி கொண்டனர். விலை
திகைய வில்லை. (உடன்பட வில்லை)
இருப்பினும்
பொன்னையா, மாடசாமியிடம் "நான் சில நாள்கள்
கழித்து மாடுகள் வாங்க
வருகிறேன் என்றும், வரும்போது கடிதம் போடுகிறேன்"
எனவும் சொல்லி
சென்றார்.
அவ்வாறே
பொன்னையா கடிதம் எழுதினார், அந்த கடிதத்தில் "நான்
வரும் வெள்ளிக்கிழமை மாடு கள வாங்க
வருகிறேன்" என்று எழுதி
அனுப்பிவிட்டார். அந்த கடிதம் மாடசாமியிடம்
சேர்ந்த நேரம் தற்செயலாக மாடுகள் காணாமல் போய்விட்டன.
மாடசாமி
அந்த கடிதத்தை காவல் நிலையத்தில் சமர்ப்பித்து, தன் மாடுகளை பொன்னையா
தான் திருடிவிட்டார் என குற்றம் சாட்டிவிட்டார்.
போலீசும் அதை நம்பும்படி ஆனது
காரணம், கடிதத்தில் இருந்த எழுத்து பிழை. அதாவது மாடுகள் வாங்க வருகிறோம் என்பதற்கு
பதிலாக மாடு கள வாங்க
வருகிறோம் என எழுதியது.
நீதி
: பேச்சில் ஏற்படும் குற்றத்தின் விளைவு குன்றளவு என்றல் எழுத்தில் ஏற்படும் குற்றத்தின் விளைவு மலையளவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக