எண்ணமே வாழ்கை ( சிறுகதை)
மந்திரி
பறிக்க போனார். அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான்.
ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல.
அது குமட்டி காய். அது தின்னா வாந்தி
தான் வரும்.
ராஜா
சொன்னார். யோவ் மந்திரி.!! அத
பறிச்சு சாப்பிடு. வாந்தி வருதான்னு பாக்கலாம்.
வேற
வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு
ஒரே வாந்தி.
ராஜா
கேட்டார். யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு.
அந்த
குருடன் சொன்னான். அது பக்கத்துல ஒரு
கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத
கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிற்கும் ன்னு.
ராஜாவும்
அப்படியே பண்ண... மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி
வந்தது.
ராஜா
குருடனை பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாதே.?
எப்படி சரியா தீர்வு சொன்னாய்.? குருடன் சொன்னான். ராஜா..!! இந்த நாட்ல எங்கேயும்
பஞ்சம் பசி பட்டினி. அப்படி
இருக்கும் போது எவனாவது வெள்ளரி
பிஞ்ச விட்டு வச்சிருப்பானா.? எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற
காய கொடுத்தா இறைவன் பக்கத்துலயே ஒரு மாற்று மருந்து
வெச்சிடுவார்.
ராஜாவுக்கு
சந்தோஷம்.
இந்தா
ஒரு டோக்கன். என் அரண்மனையில கிழக்கு
வாசலுக்கு போ. பட்டை சாதம்
கொடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலி யா இரு.
சொல்லிவிட்டு ராஜா போய்ட்டார்.
கொஞ்ச
நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி
ராஜா கிட்ட வந்தான். ராஜா என்கிட்ட வைரம்
நிறைய இருக்கிறது. வாங்குறீங்களா ன்னு கேட்டான்.
இது
ஒரிஜினலா போலியா ன்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு
ராஜாவுக்கு குழப்பம். மந்திரிய கூப்பிட்டார்.
ஏற்கனவே
ஒரு தடவை வாந்தி எடுத்த
அனுபவம் இருந்ததால...
வைரத்தை
முழுங்கித்தொலைக்க சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு
தெரியாதுன்னுட்டார்.
ராஜா
சொன்னார். மந்திரி.!! போய் அந்த கபோதிய
கூட்டிட்டு வா. அவன்தான் காரண
காரியத்தோட சரியாக சொல்லுவான்.
மந்திரி
போய் அந்த குருடனை கூட்டிட்டு
வந்தார். ராஜா சொன்னார். டேய்
இது ஒரிஜினல் வைரமா.? போலி வைரமா.? இல்லன்னா
ரெண்டும் கலந்து இருக்கா ன்னு பார்த்து சொல்லு.
அந்த
குருடன் அந்த மொத்த வைரத்தையும்
எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச
நேரம் கழித்து அதை கையில எடுத்து
பிரிச்சு.... ராஜா இதெல்லாம் வைரம்.
மற்றது எல்லாம் கண்ணாடின்னு பிரிச்சு கொடுத்துட்டான்.
வியாபாரியும்
எதோ தெரியாம நடந்துடுச்சு ன்னு சொல்லி எல்லா
வைரத்தையும் இனாமா கொடுத்துட்டு நழுவிட்டான்.
ராஜாவுக்கு
ஆச்சர்யம்.
எப்படிப்பா
கண்டு பிடிச்ச.? விவரமா சொல்லு.?
குருடன்
சொன்னான்.
ராஜா.!!
வெயில்ல வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும்.
அதனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடு ஆகாதது எல்லாம்
வைரம்ன்னும் பிரிச்சேன்.
ராஜா
சந்தோஷமா பாக்கெட்ல கைய விட்டு ஓரு
டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து போடா மேற்கு வாசலுக்கு.
டோக்கன குடுத்து பட்டை சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இருன்னு சொல்லி அனுப்பி வச்சார்.
இப்படியே
கொஞ்ச நாள் போச்சு. ராஜா
தன் மகனுக்கு கல்யாணம் பண்ண வரன் தேட
ஆரம்பிச்சார். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம்
இளவரசி கொடுக்க தயாராக இருந்தாங்க. ராஜாவுக்கு குழப்பம்.
யாரை
தேர்ந்து எடுப்பதுன்னு. மந்திரிகிட்ட கேட்கிறார். எல்லா பொண்ணுமே நல்லா இருக்குன்னு பயந்து கிட்டே மந்திரி சொல்றார்.
ராஜா
பார்த்தார்.
கூப்புடுங்கடா
அந்த கபோதிய.
குருடன்
வந்தான்.
ராஜா
குருடன் கிட்ட சொன்னார். என் மகனுக்கு கல்யாணம்
பண்ண பொண்ணு பார்க்குறேன். எந்த ராஜாவோட குமாரி
சரியா இருக்கும்ன்னு காரண காரியத்தோட தெளிவா
சொல்லு.
குருடன்
சொன்னான்.
ராஜா..!!
அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜாவோட பொண்ண பாருங்கன்னான். அந்த ராஜா உங்க
சம்பந்தி ஆயிட்டா பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு
பேருக்கும் நடுவில இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண கொடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில
பிரச்சினை வராம பார்த்துப்பான்.
ராஜாவுக்கு
ஒரே குஷி.
சபாஷ்.!!
இந்தா டோக்கன். அரண்மனையின் வடக்கு வாசலுக்கு போடா. பட்டை சாதம் குடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு அப்படின்னார்.
குருடனும்
போய்ட்டான்.
கொஞ்ச
நாள் போச்சு. ஒரு நாள் ராஜா
அந்த குருடனை தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சொன்னார்.
டேய்.!!
நான்
ஒன்னு கேட்பேன். சரியா காரண காரியதோட சொல்லனும்.*
அப்படின்னார். குருடனும் சரின்னான். இந்த ஊர்ல எல்லோரும்
என்னைய
பிச்சைகாரனுக்கு
பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க.
இதுக்கு நீ என்ன சொல்ற.?
சரியா சொல்லனும் என்றார்.
குருடன்
அமைதியா இருந்தான்.
பதிலே
பேசல.
ராஜா
திரும்ப கேட்டார்.
குருடன்
அமைதியா சொன்னான்.
ராஜா
நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன்.
நெசமா
நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான். அதுல சந்தேகமே வேணாம்
அப்படின்னான்.
ராஜாவுக்கு
தூக்கி வாரிப்போட்டது. ரொம்ப வருத்தம். ஏன்டா என்னய பார்த்தா இப்படி கணிச்சே..?? ன்னு வருத்தமா கேட்டார்.
ராஜா...
முதல்ல
குமட்டி காய பத்தி சொன்னேன்.
நீங்க சந்தோஷம் ஆயிட்டீங்க. ஆனா குடுத்தது பட்டை
சாதத்துக்கு இலவச டோக்கன்.
நிஜமான
ராஜாவா இருந்தா கையில இருந்த மோதிரத்தை கழட்டி குடுத்து இருப்பார்.
அப்புறம்
கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். நிஜமான
ராஜாவா இருந்தா கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து
இருப்பார்.
ஆனா
நீங்க குடுத்தது பட்டை சாத டோக்கன்.
மூன்றாவது...
ஒரு ராஜ்ஜியமே உங்க கைகுள்ள வருவதற்கு
வழி சொன்னேன். உண்மையான ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி
குடுத்து இருப்பார்.
நீங்க
குடுத்தது வடக்கு வாசல் பட்டை சாத டோக்கன்.
ஆக....
சோத்தை தாண்டி உங்க எண்ணம் போகல.
உலகத்துலேயே பெரிய விஷயம் சோறுன்னு முடிவு பண்ணிட்டீங்க. இதுல இருந்து தெரியல.?
நீங்க
பிச்சைக்காரனுக்கு பிறந்தவன்னு.? ஏன்னா உங்க புத்தி டோக்கனோடவும்
பட்டை சாதத்தோட வும் முடிஞ்சு போச்சு.
அதுக்கு மேல போகல என்றான்.
மன்னர்
வெட்கி தலைகுனிந்தார்.
நீங்கள்
யார் என்பதை உங்களிடம் இருக்கும் பணமோ,சொத்தோ, பதவியோ
தீர்மானிப்பதில்லை..
உங்கள்
எண்ணங்களே தீர்மானிக்கின்றன